Thursday, August 4, 2016

கோழி பண்ணை அமைப்பவர்கள் நோய் தடுப்பை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் ..


இதை படிபவர்கள் பரப்புங்கள் "share" செய்யுங்கள்..
ரத்த கழிச்சல் நோய்க்கு மருந்து ..
AMPROLIUM 'மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கவும்'
வெள்ளை கழிச்சல் மருந்து ..
("lasota and rdvk injuction")
மூலிகை மருத்துவம் வெள்ளை கழிச்சல் :
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.

Monday, July 11, 2016

Natural Fertiliser _ இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி _ பாகம் 1


Friday, July 8, 2016

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்


இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்றால் என்ன
பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர் வளர்ச்சிக்கும் அதிக அளவு பூ பிடிப்பதற்கும் காய்கனி வளர்சிக்கும் உணவு பொருள் அதிக அளவு உற்பத்தி செய்யவதற்கும் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப் படுகிறது. அவை
மீன் அமிலம்
முட்டை ரசம்
பழக்காடி கரைசல்
தேமோர் கரைசல்
தொல்லுயிர் கரைசல்
லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்
ஆட்டு ஓட்டம்
இயற்கை உர டீ
எலுமிச்சை முட்டைக் கரைசல்
மீன் அமிலம் என்றால் என்ன ?
விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள் நட்டவுடன் நன்றாக வளர்ச்சி காணப்படும் போது தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதனால் பயிர்களின் வளர்ச்சி, குறைந்த கால அளவில் அதிகமாக காணப்பட்டாலும் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகளவு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பல சமயங்களில் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
மீன் அமிலம் எப்படி தயாரிப்பது?
தயாரிக்கும் முறை:
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
மீன் அமிலம் எப்படி பயன்படுத்துவது?
பயன்படுத்தும் முறை:
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
மீன் அமிலம் நன்மைகள் என்ன ?
மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.
எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.
முட்டை ரசம் எப்படி தயாரிப்பது?
பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
பழக்காடி கரைசல் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ, கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர், ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும்.
தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
புளித்த மோர் - 5 லி இளநீர் - 1 லி இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.
தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி தயாரிப்பது?
தயாரிக்கும் முறை
50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.
தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி பயன்படுத்துவது?
பயன்படுத்தும் முறை
200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்
10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்
தொல்லுயிர் கரைசல் நன்மைகள் என்ன ?
archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.
இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

மண் வளம் மேம்பட ..

மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
1. இயற்பயில் தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)
2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)
இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
பலபயிர் வளர்ப்பு:-
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
தானியப்பயிர் :
சோளம் :- 1 கிலோ
கம்பு :- 1/2 கிலோ
தினை :- 1/4 கிலோ
சாமை :- 1/4 கிலோ
பயிறு வகை :
உளுந்து :- 1 கிலோ
பாசிப்பயறு :- 1 கிலோ
தட்டைப்பயிறு :- 1 கிலோ
கொண்டைக்கடலை :-1 கிலோ
பசுந்தாள் பயிர்கள் :
தக்கை பூண்டு :- 2 கிலோ
சணப்பை :- 2 கிலோ
நரிப்பயறு :- 1/2 கிலோ
கொள்ளு :- 1 கிலோ
மணப்பயிர்கள்:-
கடுகு :-1/2 கிலோ
வெந்தயம் :-1/4 கிலோ
சீரகம் :-1/4 கிலோ
கொத்தமல்லி :- 1 கிலோ
இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

அக்னி அஸ்திரம்

இந்த வகையான பூச்சி தாக்குதலினை எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும்.
குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம் தெளித்ததால் கொய்யா மரம் இந்த பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.
அக்னி அஸ்திரம் என்றால் என்ன?:-
நாட்டு பசுமாட்டு சிறுநீர் புகையிலை பச்சை மிளகாய் வேம்பு இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.
தயாரிக்க தேவையான பொருட்கள் :
புகையிலை:- அரை கிலோ,
பச்சை மிளகாய் :- அரை கிலோ,
வேம்பு இலை :- 5 கிலோ நாட்டு
பசுமாட்டு சிறுநீர் (கோமியம்):- 15 லிட்டர்
மண்பானை.
தயாரிக்கும் முறை:
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில்(வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது,வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.) ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.
அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தம்..
ஜீவாமிர்தம் என்றால் என்ன?
ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
ஜீவாமிர்தக் கரைசல் ஓர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். பத்து கிலோ சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும். அப்போது அவை மீண்டும் பல்கிப் பெருகும். இதன் மூலம் நிலம் வளம் பெற்று நல்ல விளைச்சலைப் பெறமுடியும். நுண்ணுயிர்களைப் பொறுத்தவரை பெருக்கம் அடைந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், மழை பெய்து நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அவை பெருக்கம் அடையாது.
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?
தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ
நாட்டு பசுங்கோமியம்-10 லிட்டர்
வெல்லம் (கருப்பு நிறம்)-2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) பனம் பழம் -4
பயறு வகை மாவு - 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)
பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட மண் கையளவு
தண்ணீர்-200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
தயாரிப்பு முறை:
தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 200 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும் . தினமும் 2 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.
பயன்படுத்தும் முறை:
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.
ஜீவாமிர்தக் கரைசலினை நேரடியாக பயிர்களுக்குப் பயன்படுத்த கூடாது. கெட்டியான திரவ நிலையிலிருக்கும் ஜீவார்மிதக் கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளித்தால் இலை, தழைகளில் உள்ள துளைகள் மூடப்பட்டுவிடும். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சை நிறுத்திவிட்டு எப்படி நம்மால் உயிர் வாழ முடியாதோ அதுபோலத்தான் பயிர்களும். தாவரங்கள் இலையில் உள்ள துளைகள் மூலமாகத்தான் சுவாசிக்கும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஜீவார்மிதக் கரைசலை பயிர்களுக்கு நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவார்மிதக் கரைசல் 20 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். இப்படி செய்வதுதான் சரியான முறை.
ஜீவாமிர்தக் கரைசலைத்தொடர்ந்து பயன் படுத்தி வந்தால், நிலத்தின் நாட்டு மண்புழுக்களின்எண்ணிக்கை பெருகும். நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.
இயற்கை முறைகளினை பயன்படுத்துவோம்.மண் வளம் காப்போம்.

செலவே இல்லாத ஜீரோ பட்ஜெட் விவசாயம்

செலவே இல்லாத ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால், பயிர் உற்பத்தி செய்வதற்கென எந்தவித பொருட்களையும் வெளியிலிருந்து வாங்காமல், உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் விவசாய நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் முறையாகும்.

Monday, April 18, 2016

வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

பயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து பாதுகாத்திடவும் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஷாஜ ஹான், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

  • வேம்பின் அனைத்து பாகங்களும் பலன் தரும்.
  • வேப்பந்தழையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும், வேப்பவித்துக் கரைசலை பூச்சிக்கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும், யூரியா போன்ற ரசாயன உரத்துடன் கலந்து இட வேண்டும். இதனால் யூரியாவின் பயன் அதிகரிக்கும்.
  • வேப்ப எண்ணெயை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சி நாசினியாக பயன்படுத்தலாம்.
  • வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0%  அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம்.
  • வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும்.
  • உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
  • 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான், இலைச்சுருட்டுப் புழு, ஆணைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படும்.
  • 3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் அல்லது காதி துணி சோப் நன்றாகக் கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1% , சாம்பல் சத்து 1.5%  உள்ளன. வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1 : 5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு, 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவும். தழைச்சத்து வீணாவதும் குறையும்.
  • நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் புழு, மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். நொச்சி மற்றும் வேப்பந்தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
  • வேம்பில் அசாடிரக்டின், நிம்பிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி  நோய் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

Monday, April 11, 2016

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை!

வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரசாயன உரங்கள், வீரிய ஒட்டு ரக விதைகள் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் மண் வளம், இயற்கை வளம் பாதிப்புக்கு உள்ளானது.
இயற்கை வேளாண்மை: மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 
இயற்கை வளங்களில் நமது எதிர்கால சந்ததியினருக்கும் பங்கு, உரிமை உண்டு. அதற்கேற்ப இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைந்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தலாம். 

இயற்கை வேளாண் உற்பத்தியில் தரமான விதை, ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மையைக் கடைப்பிடிப்பதால் போதுமான உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இயற்கை உரங்களான மண்புழு உரம், கால்நடை எருக்கள், பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. இதன் மூலம் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாடு மிகவும் குறைவு. எனவே இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள் தரமானதாக இருக்கும்.
கால்நடை உரங்கள், மரத்தடியிலிருக்கும் உதிர்ந்த இலைகள், மக்கிய குப்பை ஆகியவற்றை சேகரித்து, சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் வழங்க முடியும்.
பொருத்தமான பயிர்கள்: நெல், கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்கள் இயற்கை வேளாண்மைக்கு மிகவும் பொருத்தமானவை.
இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்கள் அதிக சத்துள்ளதாகவும், தரமுள்ளதாகவும் இருக்கின்றன. இவ்விளைப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் பொருட்டும், அதன் தரத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் இவ்விளைபொருள்கள் பசுமை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.
பசுமை அங்காடிகள்: மக்களிடம் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடு பற்றிய எண்ணங்களை மாற்றுவது, நகரங்களில் வசிப்போருக்கு இயற்கை வேளாண்மையால் உருவாக்கப்படும் பொருள்கள் கிடைக்கச் செய்வதே பசுமை அங்காடிகளின் முக்கிய நோக்கம்.
பசுமை அங்காடிகள் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பாக செயலாற்றி, மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
அங்காடியின் நன்மைகள்: பசுமை அங்காடியில் விவசாயிகள் நேரடியாக தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யலாம். இங்கு இடைத்தரகர்கள் இல்லாததால் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. நகரங்களில் வசிப்போர், நுகர்வோர் பலர் தங்களது தேவைகளை நேரடியாக விவசாயிகளிடம் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதால் மண் வளம் கெடுவதோடு, மக்களின் ஆரோக்கிய வாழ்வும் சீர்குலைகிறது. 
எனவே, இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இயற்கை வளம், மக்கள் நலனைப் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

இயற்கை விவசாயம் பற்றி அறிய 

மூலிகைப் பூச்சி விரட்டி!

மூலிகைப் பூச்சி விரட்டி!
பூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டிபயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். விரட்டினாலே போதும். அவை தானாக குறைந்து பொருளாதார சேத நிலைக்குள் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் நலமான வாழ்வை நாம் வாழவும் வழி பிறக்கும்.
விவசாயிகள் தோட்டத்தில் சுற்றிப் பார்த்து கிடைக்கும் பல மூலிகைகளில் குறிப்பாக கால்நடைகள் உண்ணாதவை, கசப்பான சுவை கொண்டது. துர்நாற்றம் வீசுபவை மற்றும் பசையும் விஷத்தன்மையும் கொண்டதாக இருப்பது எது என சேகரித்து மண்புழுக்களை பாதிக்காதவைகள் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குறிப்பாக எல்லாப்பகுதிகளில் வேலியிலும் பிற பகுதியிலும் வளர்ந்துள்ள மூலிகைகளில்நொச்சி இலை, சங்குப்பூ இலை, எருக்கம்பூ இலை, சோற்றுக் கற்றாழை இலை, வேப்பம் இலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதைகள் அரளிப்பூ இலைகள் மற்றும் விதைகள், காட்டாமணக்கு இலைகள், ஊமத்தையின் இலைகள் மற்றும் காய்கள், சீதாப்பழ இலைகள் மற்றும் காய்கள், பப்பாளி இலைகள் புகையிலையின் உவர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ இலைகள், பிரண்டையில் அனைத்து பாகங்களும், மஞ்சத் தூள், தும்பைச்செடி, காக்காச் செடி, காட்டுப்புகையிலை மற்றும் ஆர்டீமிங்சியா இலைகள் இவற்றுள் குறைந்த பட்சம் 10 தாவரப் பொருட்களில் இருந்து தலா 0.500 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு 20 லிட்டர் பசுங்கோமியம் மற்றும் 2 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கலந்து பிளாஸ்டிக் கொள் கலனில் அடைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை கலக்க வேண்டும்.
இவை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும் இவற்றை வடிகட்டி தெளிவான கரைசலைக் கொண்டு தயாரிக்கலாம்.இலை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும்.
மற்றொரு முறையில் குறைந்தது 10 தாவரங்களின் பொருட்களை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்பானையில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை குளிர்ச்சி அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.
இதன் பிறகு வடிகட்டி இலைவழித் தெளிப்பு செய்தால் அதாவது இதில் 5 லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால் போதும்.
பூரண பயிர்பாதுகாப்பு அனைத்து வித பூச்சிகள் தாக்குதலின்றி கிடைக்கும். இவை பயிர் ஊக்கியாகவும் செயல்படுவது இன்னொரு சிறப்பு.
– டாக்டர் பா.இளங்கோவன்,
உடுமலை.
இயற்கை விவசாயம் பற்றி அறிய
iyarkaivivasayamtn.blogspot.com

Friday, April 8, 2016

வேப்பம் பிண்ணாக்கு:
வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் பிண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிர்களுக்கு பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும்.

நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும்.

அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்

நன்றி: தினமலர்

Thursday, April 7, 2016

எங்கள் தோட்டத்து புதினா

எங்கள் தோட்டத்து புதினா ..
இயற்கை விவசாயம் முறையில் ..
பயிரிடபட்ட சிரிய பகுதி.. நல்ல முறையில் வளர்கிறது .


இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/

இயற்கை பூச்சி விரட்டி

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.
மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் தீபிகா, கவிப்பிரியா, மகுடீஸ்வரி, ரம்யா, சாருமதி, கவிதா ஆகியோர் கம்பத்தில் விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், பீநாரி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்கு பிறகு நன்று கலக்கி வடிகட்ட வேண்டும்.இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாக பூச்சிகளை விரட்டலாம், என கூறினர்.
இயற்கை விவசாயம் பற்றி அறிய

Wednesday, April 6, 2016

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்
அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது.

இயற்கை விவசாயம் பற்றி அறிய
http://iyarkaivivasayamtn.blogspot.in/

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

1.குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
2. குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
3.கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
4.எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
5.வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
6.ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
7.குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
8.குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
9.ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
10.சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
11.சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
12.குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
13. ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
14.குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
15.குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
16.கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
17.மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
18.ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்

நாட்டுக் கோழிகள் தாய்மை உணர்வு

நாட்டுக் கோழிகள்
தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை.
எனவே தொடர்ந்து 15--20
முட்டைகளிட்டு அவற்றைஅடைகாத்து குஞ்சு பொரிக்கும்
குணம் கொண்டவை.
தாய்மார்கள்
குழந்தைகளை பராமரிப்பது போலவே நாட்டுக்கோழிகளும்
குஞ்சுகளைக் கண்ணும் கருத்துமாகப்
பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகளைப்
பாதுகாப்பதற்காக பருந்து, கழுகு,
காக்கை போன்றஎதிரிகளிடமிருந்து காப்பதற்கு அவைகளைப்
பறந்து துரத்தி அடிக்கும் குணம்
கொண்டவை.
நாட்டுக்கோழி வளர்ப்பினால் கீழ்வரும்
நன்மைகள் ஏற்படுகின்றன.
1. கிராம மக்களின் நிலையான
வருமானம்
2. உறவினர்களுடன் உண்டு மகிழ
3. வேண்டுதலுக்காகப் பலியிட
4. அவசரத் தேவைக்கு செலவு செய்ய
5. விலங்கினப் புரதத்தை பூர்த்தி செய்ய
6. மிகக் குறைந்த
இடவசதி போதுமானது
7. குறைந்த முதலீடு போதுமானது.
8. எளிமையான
பராமரிப்பு சுற்றுப்புறத்தைத்
தூய்மையாக வைத்திருக்கும்
குறைந்த சுகாதாரப் பணியாளர்.
9. அதிக நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
10. அக ஒட்டுண்ணிகளுக்கும் நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
பெரும்பாலான கிராமங்களில்
வீட்டிற்கு குறைந்தது 10 முதல் 20
கோழிகள் வரை வளர்க்கின்றனர். பெண்கள்
அதன் மூலம் கிடைக்கும்
வருமானத்தை சிறுவாட்டுக்காசு என்றும்
சிறுசேமிப்பாகச்
சேர்த்து தேவையான
பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான
ஏழை எளிய மக்கள்
ஹைப்போ புரோட்டினிமியா என்னும்
புரதச்சத்து மிகவும் குறைந்த
உணவையே உட்கொள்கின்றனர்.
இதனால் சரியான உடல்
வளர்ச்சி இல்லாமலும்,
மூளை வளர்ச்சி இல்லாமலும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்தும்
காணப்படுகின்றனர். எனவே கிராம
மக்களுக்கு நாட்டுக் கோழிகள் மூலம்
ஓரளவு புரதச்
சத்து கிடைத்து விடுகிறது.
இது நாட்டுக் கோழியின்
சிறப்பு அம்சமாகும்.
1947ம் ஆண்டு சுதந்திரம்
பெற்றபோது நாம் உட்கொண்ட
முட்டையின் அளவு 7முதல்
10முட்டைதான் இந்தியாவில்
இன்று ஒரு நாளைக்கு 15
கோடி முட்டைகள்
உற்பத்தி செய்து முட்டை உற்பத்தியில்
இரண்டாவது இடத்தைப்
பிடித்து விட்டோம் அப்படி இருந்தும்
நாம் உட்கொள்ளும் முட்டையின்
எண்ணிக்கை 35-40 ஆக
மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் நாம்
உட்கொள்ள வேண்டிய
முட்டை ஒரு நாளைக்கு அரை முட்டை வீதம்
வருடத்திற்கு 180 முட்டைகள் சாப்பிட
வேண்டும்.
தற்போது உற்பத்தி செய்யப்படும்
முட்டைகளில் 35-40 சதவீதம்
நாட்டுக்கோழிகளில் இருந்து தான்
கிடைக்கிறது என்பதே உண்மையாகும்.
நாட்டுக் கோழிகளை வளர்பதற்கு மிகக்
குறைந்த
இடவசதியே போதுமானது முட்டைக்கோழிகளை வளர்ப்பதைப்போல்
அதிக செலவு செய்து கொட்டகைகள்
அமைக்க வேண்டிய அவசியமில்லை.
பண்ணைகளில் வளர்க்கப்படும்
வீரியக்கோழிகளுக்கு லட்சக் கணக்கில்
முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
ஆனால் ஐந்து நாட்டுக்கோழிகள்
வாங்கி அதிலிருந்தே இனப்பெருக்கம்
செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்
ஒரு கோழியிலிருந்து வருடத்திற்கு ரூ5000
வருமானம் கிடைக்கும். 10
கோழிகளை வளர்த்தாலே வருடத்திற்கு 50,000ரூபாய்
வருமானம் கிடைக்கும். கோழிப்
பண்ணைகளில் உள்ள வீரிய
இனக்கோழிகளைப் பராமரிக்க
வேலை ஆட்களை அமர்த்த
வேண்டியது அவசியம் நாட்டுக்
கோழிகளை வளர்க்க வேலை ஆட்கள்
தேவையில்லை.
வீட்டில் உள்ள பெண்களும்,
குழந்தைகளுமே போதுமானது எனவே செலவும்
குறைவாகிறது. நாட்டுக் கோழிகள்
வீட்டிற்கு வெளியில் உள்ள புழு,
பூச்சிகளைக் சாப்பிடுவதாலும், புல்
பூண்டுகளை உண்பதாலும்
சுற்றுபுறம் தூய்மையாக
இருப்பதுடன் சுகாதாரமாகவும்
இருக்கிறது. இதனால்
நாட்டுக்கோழிகள் தனக்குத்
தேவையான புரதச் சத்தையும்
நார்ச்சத்தையும்
தானே தேடிக்கொண்டு உண்பதால்
நமக்கு தீவனச் செலவு குறைவதுடன்
நாட்டுக்கோழி இறைச்சி மிருதுவாகவும்
ருசியாகவும் உள்ளது. வீரிய இனக்
கோழியின் இறைச்சி அவ்வளவாக
ருசியாக இருக்காது.
வீரிய இனக் கோழிகளுக்கு 64 நோய்கள்
தாக்குகின்றன. ஆனால் நாட்டுக்
கோழிகளுக்கு 4--5
நோய்களே ஏற்படுகின்றன. முட்டைக்
கோழிகளுக்கு 13 தடுப்பூசிகளும்,
இறைச்சிக் கோழிகளுக்கு 5
தடுப்பூசிகளும் அவசியம் போட
வேண்டும் ஆனால் நாட்டுகோழிகள்
நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டவை.எனவே 10-20
கோழிகள் வளர்ப்பவர்கள்
வெள்ளைக்கழிச்சல் நோய் என்னும்
இரானிக்கெட் நோய்க்கு மட்டும்
தடுப்பூசி போட்டால் போதுமானது.
அதிக அளவில்
நாட்டுக்கோழிகளை வளர்க்கும்
போது 4-5 தடுப்பூசிகள் கட்டாயம்
போட வேண்டியது அவசியம். ஒரு சில
சமயங்களில் மட்டுமே காக்சீடியோசிஸ்
என்னும் இரத்தக்கழிச்சல் நோயால்
நாட்டுக் கோழிகள்
பாதிக்கப்படுகின்றன. ஆனால் வீரிய
இனக்கோழிகள்
தொட்டாச்சிணுங்கியைப் போல் அதன்
பராமரிப்பில் சிறு தவறு நேர்ந்தாலும்
இரத்தக் கழிச்சல் நோயால்
பாதிக்கப்பட்டுவிடும்.
நாட்டுகோழிகளுக்கு மேரக்ஸ்
வியாதியும் கம்போரா வியாதியும்,
கொரைசா என்னும்
சிறுமூச்சுக்குழல் வியாதியும்
ஏற்படுவதில்லை. ஆனால் வீரிய
இனக்கோழிகள் இவைகளால்
பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி குறைவதுடன்
உயிரிழப்பு ஏற்படும். வீரிய
இனக்கோழிகள் கோடை காலத்தில்
வெப்பத்தைத் தாங்காமல் ஹீட் ஸ்டிரோக்
என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதிக
கோழிகள் இறந்துவிடும். ஆனால்
நாட்டுகோழிகளுக்கு குறைந்த
அளவு இறகுகளும் மெல்லிய
கொழுபற்ற தோலும் உள்ளதால்
வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறது.
நாட்டுக் கோழிகள் நெரிசலைத்
தாங்கும் குணம் கொண்டவை. ஆனால்
உயிரினக் கோழிகள் நெரிசலைத்
தாங்காது இறந்துவிடும். உயிரினக்
கோழிகள் பண்ணைகளில்
ஒரே கூட்டமாக ஒரு மூலைக்குச்
சென்றால் அதில் பெரும்பாலான
கோழிகள் இறந்துவிடும். நாட்டுக்
கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பும்
போது ஒரே கோணிப்பையில் 80-100
கோழிகளைப்
போட்டு அனுப்பினாலும் இறக்காது.
ஆனால் உயிரினக்கோழிகள் அதிகம்
இறந்து விடும். நாட்டுக்
கோழி முட்டையின் மஞ்சள் கரு நல்ல
அடர்ந்த மஞ்சள் நிறத்துடன் கெட்டியாக
இருக்கும்.
கோழிகள் புல் பூண்டுகள்
சாப்பிட்டு வைட்டமீன் எ சத்து அதிகம்
உள்ளதால் மஞ்சள் கரு அடர்த்தியாக
உள்ளது. ஆனால் உயிரினக்
கோழி முட்டையில் மஞ்சள் கரு வெளிர்
மஞ்சள் நிறமாக இருப்பதோடு, நாட்டுக்
கோழி கருவைப் போல கெட்டியாக
இல்லாமல் நீர்த்தும் இருக்கும். நாட்டுக்
கோழிகள் 15-20 முட்டைகள் இட்டவுடன்
அடைக்கு உட்கார்ந்து விடும் ஆனால்
உயிரினக்
கோழிகளுக்கு அடைகாக்கும் குணம்
கிடையாது. நாட்டுக்கோழிகள்
வெளியில் மேய்ச்சலுக்குச்
சென்று தீவனத்தை உண்ணும் குணம்
கொண்டது. ஆனால் உயிரினக் கோழிகள்
வெளியில் சென்று மேயாது.
நாட்டுக்கோழிகளை உயிரினக்
கோழிகள்
வளர்ப்பது போன்று கலப்புத்தீவனம்
கொடுத்து வளர்த்தால் அவை சரியாக
வளர்வதில்லை.
நாட்டுக் கோழி இறைச்சியின்
மருத்துவ குணங்கள் :
கடக்நாத் என்னும் கருங்கோழிகள்
மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக்
கொண்டது. இக்கோழியின்
இறைச்சி கருப்பாக இருப்பதால்
இதற்கு பிளாக் மீட் சிக்கன்
அல்லது காலாமாசி என்று அழைக்கின்றனர்.
இதன் இறைச்சி ருசியாகவும்,
மணமாகவும் இருப்பதுடன் மருத்துவ
குணமும் கொண்டது.
இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட
நோய்களுக்கு மருந்தாகப்
பயன்படுத்துகின்றனர். ஆண்மை குணம்
குறைந்த ஆண்கள் கடக்நாத்
இறைச்சியை சாப்பிட்டால்
வயாக்ரா மருந்தைப் போல
ஆண்மையை அடைவார்கள்.
ஹோமியோபதி மருத்துவத்தில்
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கடக்நாத்
கோழி இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
கடக்நாத் கோழி இறைச்சியில்
கொலஸ்டரால் சத்து மிகவும்
குறைவு என்பதால் இருதய நோய்
உள்ளவர்களுக்கும்
இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற
இறைச்சியாகும். மேலும் அதிகமான
அமினோ அமிலங்களும்
மனிதர்களுக்குத் தேவையான
ஹார்மோன் சத்துக்களும் அதிகம்
உள்ளது.
“நாட்டுக் கோழி வளர்ப்போம்
வீட்டு வருமானம் பெருக்குவோம்”